8 ஆம் வகுப்பு செய்யுள்

தாயுமானவர் திருப்பாடல் திரட்டு, இனியவை நாற்பது, தமிழ்ப்பசி, திருவள்ளுவ மாலை
நளவெண்பா, ஆவணம், விவேக சிந்தாமணி, பாரதத்தாய், திருமந்திரம், தேம்பாவணி
கம்பராமாயணம், விழுதும் வேaரும், திருவருட்பா, வில்லிபாரதம், யார்கவிஞன், தேவநேயப்பாவணர், மனம் நுகர்ந்ததற்குப் பணம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ்,
1.       நூல்குறிப்பு
1.       திருக்குறள்
நூல்வகை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்
குறள் வகை
வெண்பாக்கள்
சீர் எண்ணிக்கை
7
அடி எண்ணிக்கை
2
அதிகாரங்கள்
133
பாடல்கள்
1330
உடைமை என்னும் பெயர் அதிகாரங்கள்
10
மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை
107
ஏழு என்ற எண்ணுடன் தொடர்பு
133, 1330, 7 சீர், 8 பாடல்கள்
இயல்கள் எண்ணிக்கை
9
பெரும்பிரிவுகள்
3
வேறு பெயர்கள்
முப்பால், வாயுறைவாழ்த்து, உலகப்பொதுமறை
திருக்குறளின் சிறப்பை விளக்கும் நூல்
திருவள்ளுவமாலை
உருசிய கிரெம்ளின் மாளிகையில் உள்ள நூல்
திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் வைக்கப்பட்ட நூல்
திருக்குறள்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ஜியு.போப்
இலத்தீனில் மொழி பெயர்த்தவர்
வீரமாமுனிவர்
முப்பாலும் தப்பாமல் வந்த குறள்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து – தீதின்றி வந்த பொருள்
2.       தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய நூல்
பராபரக்கண்ணி என்னும் தலைப்பைக் கொண்ட நூல்
மனத்தூய்மை, பக்திச்சுவை ஊட்டும் நூல்
பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் உள்ள பாடல்
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணெ கருத்தேயென் கண்ணிறைந்த கற்பகமே
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
3.       இனியவை நாற்பது
நூலின் வகை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்
பாடல் வகை
வெண்பா
பாடல்களின் எண்ணிக்கை
40 வெண்பாக்கள்
பாடலின் கருத்துக்கள் எண்ணிக்கை
3 அல்லது 4
12 வது பாடல்
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
20வது பாடல்
சலவரைச் சார விடுதல் இனிதே, தகுதியால் வாழ்த
ஆசிரியர்
பூதஞ்சேந்தனார்
4.       தமிழ்ப்பசி
ஆசிரியர்
க. சச்சிதானந்தன்
பொன்னின் குவையெனக்கு
வேண்டியதில்லை
கன்னித் தமிழெனக்கு
வேண்டுமேடா
கம்பன் கவியெனக்கு
வேண்டுமேடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட
வேண்டும்
தமிழ்ப்பசியும்
ஆறிட வேண்டும்
5.       திருவள்ளுவ மாலை
எவ்வகை நூல்
திருக்குறளின் பெருமை தனி நூல்
பாடல் வகை
வெண்பாக்களால் ஆனது
பாடலின் எண்ணிகை
55
பாடிய புலவர்களின் எண்ணிகை
53
அறிவியல் அணுமுறைகொண்ட பாடல்
திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
வள்ளுவனார் வெள்ளைக்குறட்பா விரி
3 வது பாடலின் ஆசிரியர்
பிலர்
6.       நளவெண்பா
நளனின் வரலாற்றைக்கூறும் நூல்
நளவெண்பா
காண்டங்களின் எண்ணிக்கை
மூன்று
காண்டங்கள்
சுயம்வர, கலிதொடர், கலிநீங்கு
வெண்பாக்களின் எண்ணிக்கை
431
நிடத நாட்டு மன்னன்
நளன்
விதர்ப்பநாட்டு மன்னன்
வீமன்
விதர்ப்ப நாட்டு மன்னனின் மகள்
தமயந்தி
நளனும் தமயந்தியும் எதன் உதவியால் காதல் கொண்டனர்
அன்னப்பறவை
ஆசிரியர்
புகழேந்திப்புலவர்

7.       ஆவணம்
ஆசிரியர்             ந.பழநியப்பன், மரியாதைராமன் கதைகள்
8.       விவேக சிந்தாமணி
மதுதனைக் உண்டு
மயங்கியே கிடததைக்கண்டு
சம்புவின் கனி
என்று
ஆசிரியர்
தெரியவில்லை
9.       பாரதத்தாய்
பாடல் இடம்பெற்ற நூல்
காந்தி புராணம்
காந்திபுராணம் பாடல் எண்ணிக்கை
2034
காந்திபுராணம் பாட்டுடைத்தலைவன்
காந்தியடிகள்
காந்திபுராணத்தின் பாடல்
வாய்மயும் அறமும் பிறர்துயர் களையும்
தாய்மையன்பிறனை தாள்மலர் பணிவதே
ஆசிரியர்
அசலாம்பிகை அம்மையார்
10.   திருமந்திரம்
சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
திருமந்திரம்
திருமந்திரத்திலுள்ள பாடல் எண்ணிக்கை
மூவாயிரம்
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
திருமந்திரம்
3 ஆம் தந்திரம் 724 வதுபாடல்
உடம்பார் அழியின் யிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தே
திருமந்திரத்தின் புகழ்பெற்ற தொடர்
ஒன்றெ குலம் ஒருவனே தேவன்
திருமந்திரத்தின் ஆசிரியர்
திருமூலர்
11.   தேம்பாவணி
பாடல் தொடர்கள்
நகை, பகை, முகை, செய் கோலிமிட்டொ
பொருள்
வாடாத மாலை, தேன் போன்ற பாடல்
பாட்டுடைத்தலைவர்
வளர்ப்புத்தந்தை சூசையப்பர்
கிறித்தவத்தாரின் கலைக்களஞ்ச்யம்
தேம்பாவணி
காண்டங்களின் எண்ணிக்கை
மூன்று
படலங்களின் எண்ணிக்கை
36 
பாடல்களின் எண்ணிக்கை
3615     விருத்தப்பாக்கள்
நகைசெய் பகைசெய் இடம்பெற்ற படலம்
மகவருள் படலம்
ஆசிரியர்
வீரமாமுனிவர் (தமிழ்முனிவர்களுள்)

12.   கம்பராமாயணம்
காண்டங்களின் எண்ணிக்கை
ஆறு
காண்டங்கள்
பால,அயோத்தியா, ஆரண்ய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த காண்டம்
தாதுகு சோலைதோறும் - ஓதிய உடம்புதோறும் உயிரென உலாயதன்றே
பாலகாண்டத்தின் ஆற்றுப்படலத்தில்
வழிநூலா
ஆம் வழி நூல் ஆகும்
சரயு நதி பாயும் நிலம்
உத்திர பிரதேசம் மாநிலம்
ஆசிரியர்
கம்பர்
13.   விழுதும் வேரும்
தூலம் போல் வளர்கிளைக்கு விழுதுகள் தூண்கள்
விழுதும் வேரும்
நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்
விழுதும் வேரும்
ஆசிரியர்
பாரதிதாசன்
14.   திருவருட்பா
பாடலின் எண்ணிக்கை
5818 பாடல்கள்
பிள்ளைப்பெரு விண்ணப்பம் என்னும் தலைப்பிலுள்ள பாடல்
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்
ஈடின்மா னிகளாய் நெஞ்சிளைத்தவர் இளைத்தேன்
ஆசிரியர்
இராமலிங்க அடிகளார்
15.   வில்லிபாரதம்
இடம்பெற்ற அடிகள்
வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப்பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் தீண்டப்பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பேரு இருனிலத்தில் யார்தான்பெற்றாரே
பருவங்கள்
பத்து படருவங்கள்
பாடல் வகை
விருத்தப்பாக்கள்
பாடலின் எண்ணிக்க
4350 விருத்தப்பாக்கள்
கன்னபருவம் எத்த ப
எட்டாவது பருவம்
16.   யார்கவிஞன்
காசுக்குப்பாடுபவன்
யார்க்கவிஞன்
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட்கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன்
யார்க்கவிஞன்
ஆசிரியர்
முடியரசன் (துரைராசு)
17.   மனம் நுகர்ந்ததற்குப் பணம்
ஆசிரியர்        எஸ்.லட்சுமி, பார்புகழும் பரமார்த்தகுரு கதைகள்
18.   முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
நூல்வகை
தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று
பாட்டுடைத்தலைவன்
முருகன் , புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)
ஆறாவது பருவ பாடல்
உலகுகுளிர எமது மதியில் ஒழுக்கும் அமுத கிரகணமே
வளமைதழுவு பரிதிபுரியின் மருவுகுமரன் வருகவே
ஆசிரியர்
குமரகுருபரர்
பாடல் எண்ணிக்கை
பத்து பருவம், 100 பாடல்
வருகைப்பருவத்தின் மாதம்
13 வது மாதம்
பிள்ளைத்தமிழ் வகை
இரண்டு, ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ் பருவங்கள்
பத்து, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்,வருகை, அம்புலி, ஆண் – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்
2.       ஆசிரியர் குறிப்பு
1.       திருவள்ளுவர்
காலம்

திருவள்ளுவர் காலம்

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்










2.       தாயுமானவர்
பெற்றோர்
கேடிலியப்பர் – கெசவல்லியம்மாள்,
ஊர்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமறைக்காடு (வேதாரண்யம்),
மனைவி
மட்டுவார்க்குழலி,
பணி
திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அமைச்சர்

நூல்
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
காலம்
பதினெட்டாம் நூற்றாண்டு
நினைவு இல்லம்
இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமி புரத்தில்

3.       பூதஞ்சேந்தனார்
தந்தை
மதுரை தமிழாசிரியர்
ஊர்
மதுரை
காலம்
கி.பி இரண்டாம் நூற்றாண்டு
4.       க. சச்சிதானந்தன்
ஊர்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்
பணி
ஆசிரியர்பயிற்சிப்பள்ளியில்விரிவுரையாளராகஇருந்தவ்ர்
புலமை பெற்ற மொழிகள்
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்
யாருடையமாணவர்
மகாவித்வான் நவநீத கிருட்டின பாரதியாரின் மாணவர்
கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும்
க.சச்சிதான்ந்தன்
படைப்புகள்
ஆனந்தத்தேன் (கவிதைத்தொகுதி 1954)
அன்னபூரணி (புதினம்)
யாழ்பாணக் காவியம்
தமிழ்ப்பசி
5.       கபிலர்
காலம்
2 ஆம் நூற்றாண்டு, சங்ககாலத்துக்குப்பின்
இயற்றியவை
குறிஞ்சிப்பாட்டு,திருவள்ளுவமாலையின் 3 வது பாடல்
6.       புகழேந்திப்புலவர்
ஊர்
பொன்விளைந்த களத்தூர் தொண்டைநாட்டின்
பணி
வரகுணபாண்டியனின் அவைப்புலவர்
ஆதரித்த வள்ளல்
சந்திரன் சுவர்க்கியால் ஆதரிக்கப்பட்டவர்
காலம்
பன்னிரண்டாம் நூற்றாண்டு
சிறப்புப் பெயர்
யாப்பில் காப்பியப்பொருளை தொடர்நிலைச் செய்யுளாய் பாடியதால் வெண்பாவிற் புகழேந்தி எனப்போற்றப்படுகிறார்

7.       அசலாம்பிகை அம்மையார்
ஊர்
திண்டிவன் இரட்டனை
இயற்றிய நூல்கள்
ஆத்திச்சூடி வெண்பா
காந்திபுராணம்
திலகர் புராணம்
குழந்தைசுவாமிகள் பதிகம்
இராமலிங்கசுவாமிகள் சரிதம்
இக்கால ஔவையார் யார்
அசலாம்பிகை அம்மையார்
இக்கால ஔவையார் என அழைத்தவர்
திரு.வி.க
இராமலிங்கசரிதம் நூலின் பாடல் எண்ணிக்கை
409
அசலாம்பிகை அம்மையார் பலகாலம்
கடலூரில் வாழ்ந்தார்
அசலாம்பிகை அம்மையார் சிலகாலம்
வடலூரில் வாழ்ந்தார்
அசலாம்பிகை வடலூரில் எழுதிய நூல்
இராமலிங்கசுவாமிகள் சரிதம்
8.       திருமூலர்
இயற்றிய நூல
திருமந்திரம்
காலம்
ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி
மூலன்
இயற்பெயர்
திரு
பெயரடை
அர்
மரியாதைப்பண்பும்
9.       வீரமாமுனிவர்
இயற்பெயர்
காண்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
பெற்றோர்
கொண்டல் போபெஸ்கி – எலிசபெத்
நாடு
இத்தாலி
சிறப்பு
30 ஆம் வயதில் காப்பியம் படைத்தவர்
இயற்றிய நூல்கள்
ஞானோபதேசம், பரமார்த்த குருகதை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம், கித்தேரியம்மாள் அம்மானை, திருக்காவலூர் கலம்பகம்
காலம்
08.11.1680 – 04.02.1747
10.   கம்பர்
ஊர்
நாகப்பட்டினம் மா மயிலாடுதுறைக்கு அரு உள்ள தேரெழுந்தூர்
ஆதரித்த வள்ளல்
சடையப்ப வள்ளல்
இயற்றிய நூல்கள்
ஏரெழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், கம்பராமாயணம்
காலம்
பன்னிரண்டாம் நூற்றாண்டு
கம்பர் சிறப்பு
வடசொற்களைத் தொல்காப்பியய் நெறிப்படை தமிழ்ப்படுத்தியவர்
தாம் இயற்றிய
இராமாவதாரம்
வால்மீகி யார்
வட மொழி (சமஸ்கிருதம்) எழுத்தாளர்
கம்பரின் சிறப்பு பெயர்கள்
கல்வியில் பெரியவர், கவிச்சக்ரவர்த்தி, கவிப்பேரரசர், விருத்தமெண்ணும் ஒண்பாவிற்கு உயர், கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்
11.   பாரதிதாசன்
இயற்பெயர்
சுப்புரத்தினம்
பெற்றோர்
கனகசபை – இலக்குமி அம்மையார்
ஊர்
புதுச்சேரி
காலம்
29.04.1891 – 21.04.1964
சிறப்புப் பெயர்கள்
பாவேந்தர், புரட்சிக்கவிஞர், தமிழ்க்கவி
இயற்றிய நூல்கள்
பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, சேர தாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு, இளைஞர் இலக்கியம், மணிமேகலை வெண்பா
பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்
பாரதிதாசன்
12.   இராமலிங்க அடிகளார்
ஊர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் மருதூர்
சிறப்புப்பெயர்
திருவருட்பிரகாச வள்ளலார்
பெற்றோர்
இராமையா – சின்னம்மையார்
காலம்
05.10.1823 – 30.01.1874
இயற்றிய நூல்கள்
திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்
மதநல்லிணக்கத்திற்காக
அறிவுநெறி விளங்க
பசிப்பிணி போக்க
சமரச சன்மார்க்க நெறி
ஞான சபை
அறச்சாலை (சத்திய தருமச்சாலை) வடலூர்
மாணிக்க வாசகரைப்பற்றிய பாடல்
மாணிக்க வாசக நுன்பாடலை நான்கலந்து
சத்திய தருமச்சாலை இடம்
வடலூர்
13.   வில்லிபுத்தூரார்
தந்தை
வீரராகவர்
ஆதரித்தவர்
வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
காலம்
பதினான்காம் நூற்றாண்டு
இயற்றிய நூல்
வில்லிபாரதம்
14.   முடியரசன்
இயற்பெயர்
துரைராசு
பெற்றோர்
சுப்பராயலு – சீதாலட்சுமி
ஊர்
தேனி மாவட்டம் பெரியகுளம்
இயற்றிய நூல்கள்
பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்
பணி
காரைக்குடி மீசு. உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்
பட்டம்
கவியரசு (பறம்புமலை விழாவில் குன்றக்குடி அடிகளார்)
யாரால் கவியரசு
பறம்புமலை விழாவில் குன்றக்குடி அடிகளாரால்
பரிசுபெற்ற நூல்
பூங்கொடி (1966 தமிழக)
பரிசு ஆண்டு
1966 பூங்கொடி தமிழக அரசு
முடியரசன்
பாரதிதாசன் பரம்பரைக்கவிஞர்களுள் மூத்தவர்
முடியரசன்
அண்ணா, பெரியாரோடு நெருங்கிப் பழகியவர்
காலம்
07.10.1920 – 03.12.1998
15.   குமரகுருபரர்
ஊர்
திருவைகுண்டம்
பெற்றோர்
சண்முகசிகாமணிக்கவிராயர் – சிவகாமி சுந்தரி அம்மையார்
இயற்றிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லி மாலை, மதுரைக்கலம்பகம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சிமியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை, திருவாரூர் நான்மணிமாலை
காலம்
17 ஆம் நூற்றாண்டு
இறந்த இடம்
காசி
மடம் நிறுவிய இடம்
காசி, திருப்பந்தாள்
புலமை பெற்ற மொழி
தமிழ், வடமொழி, இந்துஸ்தானி
3.       இடம் பெற்ற நூல்
அறுசுவை உண்டி அமந்தில்லாள் ஊட்ட
நாலடியார்
வளைகதிர் வல்சிகொண் டளைமல்க
புறநானூறு
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை
புறநானூறு
உப்பிலி புழுக்கல்
சீவக சிந்தாமணி
இறடி பொம்மல் பெருகுவீர்
மலைபடுகடாம்
பசுந்தினை மூரல் பாலோடும் பெறுகுவீர்
பெரும்பாணாற்றுப் படை

4.       சொற்பொருள்
சுடர்
ஒளி
ஆனந்தம்
மகிழ்ச்சி
பராபரம்
மேலான பொருள், இறைவன்
குழவி
குழந்தை
பிணி
நோய்
கழறும்
பேசும்
மயரி
மயக்கம்
சலவர்
வஞ்சகர்
மன்னுயிர்
நிலைபெற்ற உயிர்
குவை
குவியல்
மாரன்
மன்மதன்
வள்ளை
பெண்களால் பாடப்படும் உலக்கைப்பாட்டு
அளகு
கோழி
ஆழி
கடல்
வடி அம்பு
வடிக்கப்பட்ட அம்பு
விசும்பு
வானம்
செற்றான்
வென்றான்
அரவு
பாம்பு
பிள்ளைக்குறுகு
நாரைக்குஞ்சு
வள்ளை
நீர்க்கொடி, உலக்கைப் பாடல்
கடா
எருமை
வௌவி
கவ்வி
சங்கின் பிள்ளை
சங்குக்குஞ்சுகள்
கொடி
பவளக்கொடி
கோடு
கொம்பு
கழி
உப்பங்கழி
திரை
அலை
மேதி
எருமை
கள்
தேன்
புள்
அன்னம்
சேடி
தோழி
ஈரிருவர்
ஈரிருவர்
ஊசலாடுற்றாள்
மனம் தடுமாறினாள்
தார்
மாலை
செம்மைசேர்
புகழ்மிகு
கடிமாலை
மணமாலை
சூழ்விதி
நல்வினை
காசினி
நிலம்
நன்னுதல்
அழகிய நெற்றி
வெள்கி
நாணி
களிகூர
மகிழ்ச்சி பொங்க
வயவேந்து
வெற்றி வேந்தன்
ஒண்தாரை
ஒளிமிக்க மலர்மாலை
மல்லல்
வளம்
மறுகு
அரசவீதி
மடநாகு
இளைய பசு
மழவிடை
இளங்காளை
செம்மாந்து
பெருமிதத்துடன்
மது
தேன்
தியங்கி
மயங்கி
சம்பு
நாவல்
மதியம்
நிலவு
வாய்மை
உண்மை
களையும்
நீக்கும்
வண்மை
வள்ளல் தன்மை
துலங்குதல்
விளங்குதல்
சேய்மை
திலைவு
தவம்
பெரும்பேறு
திடம்
உறுதி
மெய்ஞ்ஞானம்
மெய்யறிவு
உபாயம்
வழிவகை
நகை
புன்னகை
முகை
மொட்டு
மேனி
உடல்
தாது
மகரந்தம்
போது
மலர்
பொய்கை
குளம்
பூகம்
கமுகம் (பாக்கு மரம்)
திறல்
வலிமை
மறவர்
வீரர்
பசியறாது
பசித்துயர் நீங்காது
அயர்ந்த
களைப்புற்ற
நீடிய
தீராத
வான்பெற்ற நதி
கங்கை ஆறு
துழாய் அலங்கல்
துளசி மாலை
களபம்
சந்தனம்
புயம்
தோள்
தைவந்து
தொட்டுத்தடவி
ஊன்
தசை
பகழி
அம்பு
நாமம்
பெயர்
இருநிலம்
பெரிய உலகம்
கைம்மாறு
பயன்
மாசற்ற
குற்றமற்ற
தேட்டையிட
செல்வம் திரட்ட
மீட்சி
மேன்மை
மாள
நீங்க
மதி
அறிவு, நிலவு
அமுதகிரகணம்
குளிர்ச்சியான ஒளி
உதயம்
கதிரவன்
மதுரம்
இனிமை
நறவம்
தேன்
கழுவுதுகளர்
குற்றமற்றவர்
சலதி
கடல்
அலகுஇல்
அளவில்லாத
புவனம்
உலகம்
மதலை
குழந்தை
பரிதிபுரி
வைத்தீஸ்வரன் கோவில் (இறைவன் வழிப
வினை
செயல்
காப்பு
காவல்
நீரவர்
அறிவுடையார்
கேண்மை
நட்பு
பேதையார்
அறிவில்லாதார்
நவில்தோறும்
கற்கக்கற்க
நயம்
இன்பம்
நகுதல்
சிரித்தல்
நட்டல்
நட்பு கொள்ளல்
இடித்தல்
கடிந்துரைத்தல்
கிழமை
உரிமை
முகநக
முகம் மலர
அகம்
உள்ளம்
ஆறு
நல்வழி
உய்த்து
செலுத்தி
அல்லல்
துன்பம்
உடுக்கை
ஆடை
இடுக்கண்
துன்பம்
களைவது
நீக்குவது
கொட்பின்றி
வேறுபாஉ இல்லாமல்
ஊன்றும்
தாங்கும்
புனைதல்
புகழ்தல்
புல்
கீழான
வழக்கு
நன்நெறி
ஆன்ற
உயர்ந்த
நயன்
நேர்மை
நன்றி
உதவி
நகையுள்ளும்
விளையாட்டாகவும்
பாடறிவார்
அறிவுடையார்
மாய்வது
அழிவது
அரம்
கருவி
நண்பு
நட்பு
நயம்இல
இனிமையற்ற, தீங்கு
கடை
இழிவு
நகல்வல்லர்
சிரித்து மகிழ்பவர்
மாயிரு ஞாலம்
மிகப்பெரிய உலகம்
திரிந்தற்று
திரிந்தது போன்றது
கலம்
பாத்திரம்
மண்புக்கு
மண்ணோடு மண்ணாகி
5.       பிரித்து எழுதுக
தாய்மையன்பிறனை
தாய்மை + அன்பின் + தனை
ஒன்றுற
ஒன்று + உற



Comments

Post a Comment

Popular posts from this blog

8 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

8 ஆம் வகுப்பு உரைநடை