TNPSC STUDY MATERIAL பொதுத்தமிழ் சமச்சீர் பாடத்திட்டம்







பொதுமை வேட்டல்

  • தெய்வ நிச்சயம் முதலாக போற்றி ஈறாக 44 தலைப்புகள் 

  • 430 பாடல் கொண்ட நூல்

  • நாடு, இனம், மதம், மொழி அனைத்தும் கடந்து உலகை ஒரு குடும்பமாகக் கருதுவது

  • நாடு, இனம், மொழி, மத வேற்றுமைகள் விலகும், சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும்

  • உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்

முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • அறவுரைக்கோவை எனவும் அழைக்கப்பெறும்
  • சிறந்தது எனக் கூறப்படும் பத்துப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது
  • 10 அதிகாரம், 100 பாடல்கள் கொண்ட நூல்
  • காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
  • உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்
  • கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள், இன்பம் அடைவதற்கான அறவுரைகளாக
கல்விக்கு எல்லை இல்லை  (சங்ககாலத்திற்குப் பின் வாழ்ந்தவர்)
  • தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றது
  • இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க
  • சந்திர சேகரக் கவிராசப்பண்டிதர் தமிழகம் முழுவதும் தேடிச்சென்று தொதுத்துள்ளார்
  • தமிழ்மொழியின் பெருமை, புலவரின் புலமை, 
  • சொல்லின்பம், பொருளின்பம், கற்பனையின்பம் தருவது
திரிகடுகம் (நல்லாதனார்)

  • நூல் வகை                                                       பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • பா வகை                                                            வெண்பா
  • பாடல் எண்ணிக்கை                                    100 வெண்பாக்கள்
  • ஆசிரியர்                                                            நல்லாதனார்
  • நூற்பயன்                                                          மனமயக்கத்தைப்போக்கித் தெளிவைக் கொடுக்கும்                                                                                        அறியாமையாகிய நோயைப்போக்கிக் குன்றின்மேலிட்ட விளக்காக்கும்
  • கருத்துக்களின் எண்ணிகை                     மூன்று
  • மருந்து பொருள்கள்                                     சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்து


நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கனீயராயினும்                 
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்                 
சேய்த்தாலும் சென்றுகொளல் வேண்டும் - செய்வினைக்கும் 
வாய்க்கால் அனையார் தொடர்பு.                               நாலடியார்
  • நூல் வகை                                  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • வேறு பெயர்கள்                      நாலடி நானூறு, வேளான் வேதம்
  • பாடல் எண்ணிக்கை             400 பாடல்கள்
  • பாடல் ஆசிரியர்                     சமண முனிவர் பலர்
  • பாடலின் கருத்து                   அறக்கருத்துக்கள்
 மனைக்கு விளக்கு மடவார்; மடவார்                                                                    தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய                                                                    காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்                                                                      ஓதின் புகல்சால் உணர்வு.                                                       நான்மணிக்கடிகை
  • கடிகை என்பதன் பொருள்                                             அணிகலன்
  • நான்மணிக்கடிகை என்பதன் பொருள்                  
                                                                      நான்கு மணிகள் கொண்ட அணிகலன்
  • நான்மணிக்கடிகை பாடலின் கருத்துக்கள் எண்ணிக்கை           4
  • நான்மணிக்கடிகை ஆசிரியர்                                          விளம்பி நாகனார்
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அவை
வேற்றுநாடு  ஆகா தமவேயாம் ஆதலால்
ஆற்றுணா வேண்டுவது இல்.                                                கல்வியின் சிறப்பு
  • கல்வியின் சிறப்பு இடம் பெற்ற நூல்                                 பழமொழி நானூறு
  • நூல் வகை                                                                                பதினெண்கீழ்க்கணக்கு  
    கல்வியின் சிறப்பு ஆசிரியர்                                              முன்றுரை அரையனார்







  • பாடல் எண்ணிக்கை                                                              நானூறு
  • ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி இடம் பெறும் நூல்                                                                                                                                   பழமொழிநானூறு







  • பாடலில் இடம்பெற்ற பழமொழி                 ஆற்றுணா வேண்டுவது இல்
  • ஆற்றுணா வேண்டுவது இல் என்பதன் பொருள்                                                                                                                           கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா          
வைதாரைக் கூட வையாதே - இந்த வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை பறவைகள் மீது எறியாதே
பாம்பினைப் பற்றி ஆட்டாதே, பத்திகளைப் பழிக்காதே
வேம்பினை உலகில் ஊட்டாதே - வீறாப்பௌ நாட்டாதே
போற்றும் சடங்கை நண்ணாதே - புகலல் ஒண்ணாதே
சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே - தாழ்வை நீ பண்ணாதே
கள்ள வேடம் புனையாதே - கங்கையில் நனையாதே
கொள்ள கொள்ள நினையாதே - கோள் முனையாதே.                சித்தர் பாடல்
  • சித்தர் பாடல் ஆசிரியர்                                                           கடுவெளிச்சித்தர்
  • சித்தர்கள் வாழ்ந்த காலம்                                       400 ஆண்டுகளுக்கு முன்
  • சித்தர்கள் வாழ்ந்த இடம்                                          காடு, மலைகளில்
  • வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்             கடுவெளிச்சித்தர்
  • அழுகுணிச்சித்தர், கதம்பைச்சித்தர், பாம்பாட்டிச் சித்தர் என்பன அனைத்தும் ...................... பெயர்கள்.                                காரணப்பெயர்கள்

நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
  • நாடாகு ஒன்றோ பாடல் ஆசிரியர்                       சங்க கால ஔவையார்
  • அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்                                                                                                                                  சங்ககால  ஔவையார்
  • சங்ககால பெண் புலவர்களில் மிகுதியான பாடல் பாடியவர்                                                                                                                   ஔவையார்
  • சங்க இலக்கியம் …………….. ஆண்டுகள் பழமை வாய்ந்தவை                                                                                                                ஈராயிரம் (2000)
  • பாடல் வகை                                                              நேரிசை ஆசிரியப்பா
  • ஆடவர் என்பதன் பொருள்                        ஆண்கள் (இப்பாடலில் மக்கள்)

Comments

Popular posts from this blog

8 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்

8 ஆம் வகுப்பு செய்யுள்

8 ஆம் வகுப்பு உரைநடை